வடகிழக்கு மாநிலங்களில் மீண்டும் தலை தூக்கும் ‘நாய் கடத்தல்’
வடகிழக்கு மாநிலங்களில் நாய் கடத்தல் சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
Subscribe to Oneindia Tamil
அய்சால்: வடகிழக்கு மாநிலங்களில் மீண்டும் நாய் கடத்தல் சம்பவம் அரங்கேறியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் நாய் கறி விற்பனை கனஜோராக நடைபெற்று வருகிறது. இதற்காக அண்டை மாநிலங்களில் அலைந்து கொண்டிருக்கும் தெருநாய்கள், வீட்டு நாய்கள் திருடப்பட்டு கடத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய கடத்தல் சம்பவங்களை போலீசார் பல முறை தடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படி நாய் கடத்தல் சம்பவம் நடந்திருக்கிறது.
இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து போலீசார் விரைந்து செயல்பட்டு கடத்தப்பட்ட 17 நாய்கலை மீட்டனர்.












Click it and Unblock the Notifications