டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்.. பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு வார்த்தை தோல்வி
மத்திய அமைச்சருடன் விவசாயிகள் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது.
டெல்லி: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து உரிய பதில் வரும் வரை தங்களது போராட்டம் தொடரும் என விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் 29வது நாளை எட்டியது. மத்திய அரசு சார்பில் எந்த உறுதியும் அளிக்காததால் விரக்தி அடைந்த விவசாயிகள் நேற்று நாடாளுமன்றம் முன்பு திடீரென தங்களது ஆடைகளை களைந்து நிர்வாணமாக சாலையில் ஓடி, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இன்றும் விவசாயிகள் மண் சோறு சாப்பிட்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகத்தில், அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழக விவசாயிகளின் போராட்டம் உணர்வு பூர்வமானது. விவசாயிகள் பிரச்சினைக்கு அமைச்சரவை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு மீது விவசாயிகள் நம்பிக்கை வைக்க வேண்டும்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு விவசாயிகள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
மேலும் விவசாயிகளின் கோரிக்கை மனுவை பிரதமரிடம் அளிப்பதாகவும் உறுதியளித்த அவர், விவசாயிகள் போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் வரும்வரை டெல்லியில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடரும் எனக் கூறினார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications