மணிப்பூரில் ஜனாதிபதி திறந்து வைத்த நினைவுச் சின்னம் 4 நாட்களில் மர்மமாக 'மாயம்'
இம்பால்: மணிப்பூரில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திறந்து வைத்த நினைவுச் சின்னம் 4 நாட்களிலேயே மாயமானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கி.பி. 1891-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கும், மணிப்பூர் அரசுக்கும் இடையே போர் நடைபெற்றது. இது கடைசிப் போராக கருதப்படுகிறது.

இந்தப் போர் நடைபெற்று 125-ஆவது ஆண்டு தின கொண்டாட்டத்தையொட்டி சுற்றுலா மையமாகவும், போரில் வீர மரணமடைந்தவர்களின் நினைவைக் குறிக்கும் விதமாகவும் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.
கோங்ஜோம் போர் நினைவு அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்ட இந்த சின்னத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த சனிக்கிழமை திறந்து வைத்தார். ஆனால் அந்த நினைவுச் சின்னத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக மணிப்பூர் மாநில முன்னாள் அமைச்சரும், அறக்கட்டளையின் தலைவருமான எம்.ஹேமந்தா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
கடந்த 1972-ஆம் ஆண்டு கோங்ஜோமில் நிறுவப்பட்டு அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரியால் திறந்து வைக்கப்பட்ட மற்றொரு நினைவுச் சின்னமும் காணாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications