என்னை கண்ட இடத்தில் தொட்டு செக்ஸ் தொல்லை: தயாரிப்பாளர் மீது டிவி நடிகர் பரபர புகார்
மும்பை: டிவி தொடர் நடிகர் பார்த் சம்தானும், இந்தி தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சி தலைவரும், தயாரிப்பாளருமான விகாஸ் குப்தாவும் 3 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்ததாக தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தெரிவித்துள்ளார். விகாஸ் தன்னை கண்ட இடத்தில் தவறாக தொட்டதாக பார்த் புகார் தெரிவித்துள்ளார்.
கெய்சி ஏ யாரியான் என்ற இந்தி டிவி தொடர் மூலம் பிரபலம் ஆனவர் நடிகர் பார்த் சம்தான். அவர் இந்தி தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சி தலைவரும், தயாரிப்பாளருமான விகாஸ் குப்தா தன்னை கண்ட இடத்தில் தொட்டு செக்ஸ் தொல்லை அளித்ததாக புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா பட தயாரிப்பாளரான ஏக்தா கபூர் கூறுகையில்,
விகாஷ் மற்றும் பார்த் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள். அவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். விகாஷ் தன்னை தகாத முறையில் தொட்டதாக பார்த் குற்றம்சாட்டினார். அதன் பிறகு 20 நாட்கள் கழித்து அவர் விகாஸுடன் பாங்காக்கில் ஜாலியாக இருந்தார். புத்தாண்டை வரவேற்க நானும் பாங்காக்கில் இருந்ததால் இது பற்றி எனக்கு தெரியும். பார்த் விகாஸ் மீது தனக்கு இருந்த காதலை பல்வேறு வீடியோக்கள் மூலம் தெரிவித்தார் என்றார்.
இது பற்றி விகாஸ், பார்த்துக்கு நெருக்கமானவர் ஒருவர் கூறுகையில்,
பார்த், விகாஸ் ஆகியோர் பிரிந்துவிட்டனர். அதனால் தான் விகாஸ் மீது பார்த் புகார் தெரிவிக்கிறார். விகாஸால் தான் பார்த் நடிகராக வளர்ந்தார் என்பதை அவர் மறந்துவிட்டார். அவர்கள் 3 ஆண்டுகளாக ஒன்றாக இருந்தனர். முதலில் நடிகைகள் தான் இது போன்ற குற்றச்சாட்டை தெரிவித்தார்கள். தற்போது நடிகர்களும் ஆரம்பித்துவிட்டனர் என்றார்.