உத்தரகாண்ட்டில் ராகுல்... "டென்ட்"டில் தங்கி ஓய்வெடுக்கிறார்.. தாய்லாந்து போகவில்லை!
நைனிடால்: தாய்லாந்து போவதற்காக ராகுல் காந்தி டிக்கெட் எடுத்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் அங்கு போகவில்லை. மாறாக இந்தியாவில்தான் ஓய்வெடுத்து வருகிறார். அதுவும் உத்தரகாண்ட் மாநிலத்தில்தான் அவர் தங்கியிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
— jagdishkumarsharma (@jagdishkumarsh4) February 24, 2015 கட்சிப் பணிகளிலிருந்து எனக்கு விடுப்பு தேவை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விண்ணப்பித்து அதற்கு அவரும் அனுமதி வழங்கியது பெரும் சர்ச்சையாக சில கட்சிகளால் கிளப்பப்பட்டு வருகிறது. ராகுல் காந்தியின் சீரியஸ்னஸ் என்ன என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. ராகுல் காந்தியின் ஓய்வு சர்ச்சையாகியுள்ள நிலையில் அவர் தனது ஓய்வைத் தொடங்கியுள்ளார்.
— jagdishkumarsharma (@jagdishkumarsh4) February 24, 2015 முதலில் அவர் பாங்காங் செல்வதற்கு டிக்கெட் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அவர் அங்கு போகவில்லை. மாறாக உத்தரகாண்ட்டில் அவர் ஓய்வெடுத்து வருவது தெரிய வந்துள்ளது. அங்குள்ள ஒரு இடத்தில் டென்ட் அடித்து அதில் ராகுல் தங்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படத்தை காங்கிரஸைச் சேர்ந்த ஜெகதீஷ் குமார் சர்மா என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
— jagdishkumarsharma (@jagdishkumarsh4) February 24, 2015 அதில் ராகுல் காந்தி டென்ட்டுக்குள் அமர்ந்திருப்பது போல உள்ளது. மேலும் டென்ட்டுக்கு வெளியே அமர்ந்து ராகுல் காந்தி போனில் பேசுவது போன்ற படமும் அதில் இடம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications