மோடியின் தனிப்பட்ட ஊழல் பற்றி தகவல் உள்ளது.. ராகுல் காந்தி பகீர் பேட்டி
டெல்லி: பிரதமர் மோடியின் தனிப்பட்ட ஊழல் குறித்த தகவல் என்னிடம் உள்ளது, அதைதான் நான் பாராளுமன்றத்தில் பேச விரும்புகின்றேன் ஆனால் என்னை பேசுவதற்கு அனுமதிப்பது கிடையாது என காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
இதனையடுத்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சியின் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது ராகுல் காந்தி கூறியது:

பிரதமர் மோடி ஊழல் தொடர்பான சில தனிப்பட்ட தகவல்கள் என்னிடம் உள்ளது. இதனையே நான் லோக்சபாவில் பேச விரும்புகின்றேன். ஆனால் மத்திய அரசு என்னை பேச விடுவதில்லை. அனைத்து எதிர்க்கட்சியினரையும் பாராளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும். பிரதமர் மோடி நாட்டிற்கு விளக்கம் கொடுக்க வேண்டியது உள்ளது. பாப் நிகழ்ச்சிகள் மற்றும் பொது கூட்டங்களுக்கு சென்று தொடர்ந்து அவர் தப்பி ஓடிவிட முடியாது.
ரூபாய் நோட்டு ஒழிப்பு முடிவானது ஏழை மக்களின் இதயத்தில் ஈட்டியை போன்றது என்றார்.












Click it and Unblock the Notifications