வன்முறை நீடிக்கும் காஷ்மீரில் பெல்லட் குண்டுகளுக்கு மாற்று ஏற்பாடு.... ராஜ்நாத்சிங் உறுதி..
ஜம்மு: காஷ்மீரில் தொடர்ந்து கலவரம் நடந்து வந்த நிலையில் நேற்று இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் சென்றார். இந்தப் பயணத்தின் போது காஷ்மீர் மாநில முதலமைச்சர் மெக்பூபாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், பெல்லட் குண்டுகளுக்கு பதில் மாற்றுத் துப்பாக்கிகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜ்நாத்சிங் உறுதியளிதுள்ளார்.
காஷ்மீரில் புர்கன் வானி கொல்லப்பட்டத்தற்கு பின்னர் உருவான கலவரச் சூழல் இன்னும் தணியவில்லை. இந்தக் கலவரத்திற்கு இதுவரை போலீசார் உட்பட 68 பேர் பலியாகியுள்ளனர்.

தொடர் கலவரத்தை கட்டுப்படுத்த, காஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவரான ஒமர் அப்துல்லா தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து, 2 நாள் பயணமாக நேற்று காஷ்மீர் சென்றார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். அங்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இன்று காஷ்மீர் முதலமைச்சர் மெக்பூபாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பின்னர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
• காஷ்மீரில் நடந்து வரும் கலவரம் கவலை அளிப்பதாக உள்ளது.
• பாதுகாப்பு படையினர் கொல்லப்படுவது குறித்து மட்டும் நான் கவலைப்படவில்லை.
• அனைத்து மக்களும் கொல்லப்படுவது குறித்தும் கவலை அடைந்துள்ளேன்.
• பெல்லட் குண்டுகளுக்கு பதில் மாற்று துப்பாக்கிகள் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
• ராணுவத்தை மட்டுமே நாம் குறை சொல்லக் கூடாது.
• காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது மக்களை காப்பாற்றியவர்கள் ராணுவத்தினர்.
• காஷ்மீருக்கு அனைத்துக் கட்சி குழு ஒன்று அழைத்து வரப்படும்..
• காஷ்மீரில் உள்ள இளைஞர்களுடன் தீவிரவாதிகள் விளையாட வேண்டாம்.
• துயரத்தில் இருக்கும் காஷ்மீர் மக்களுக்கு உதவ அதிகாரிகள் விரையில் நியமனம்.
• காஷ்மீர் இல்லாமல் இந்தியாவின் எதிர்காலம் என்பது இல்லை.
• காஷ்மீர் இளைஞர்களை தவறான வழியில் நடத்திச் செல்ல முயற்சிப்போரை அடையாளம் காண வேண்டும்.
• காஷ்மீர் இளைஞர்களின் கையில் கற்களுக்கு பதில் பேனாக்களும், புத்தகங்களும் இருக்க வேண்டும்.
• இங்கு வருவதற்கு முன் சொன்னது போன்று என்னை சந்திக்க விரும்பிய 300 பேரை சந்தித்தேன்.
• காஷ்மீரின் அமைதியை விரும்பும் 20 பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.
• மக்களுக்கு அமைதிதான் வேண்டும். அதனை அடைவோம்.
இவ்வாறு செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications