கணவர் நடராஜன் தொடர்ந்து கவலைக் கிடம்... இன்று பரோலில் வருகிறார் சசிகலா?
பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா இன்று பரோலில் வெளிவரலாம் என கூறப்படுகிறது.
பெங்களூரு: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது கணவரை காண சசிகலா இன்று பரோலில் வெளி வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலாவின் கணவர் நடராஜன் சிறுநீரகம் மற்றும் கல்லீரல், செயலிழந்ததால் சென்னையிலுள்ள கிளனேஜல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கல்லீரல் முற்றிலும் செயலிழந்துள்ளதால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கான பணிகளில் சசிகலா குடும்பத்தினர் இறங்கியுள்ளனர். நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து கணவர் நடராஜனை காண சசிகலா பரோல் கோரி விண்ணப்பித்துள்ளதாக டிடிவி தினகரன் நேற்று தெரிவித்தார். இந்நிலையில் தசரா விடுமுறை முடிந்துள்ளதால் சசிகலாவுக்கு இன்று பரோல் கிடைக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.