ரூ.2 கோடி லஞ்சம்.. பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை! ஐபிஎஸ் அதிகாரி பரபரப்பு அறிக்கை
பெங்களூர்: பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக ஐபிஎஸ் அதிகாரி தாக்கல் செய்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறைத்துறை டிஐஜியான ரூபா, கர்நாடக டிஜிபி ஆர்.கே.தத்தாவுக்கு, சிறைத்துறை டிஜிபி ஹெச்.எஸ்.சத்யநாராயண ராவ் மற்றும் சிறை அதிகாரிகள் குறித்து குற்றம்சாட்டி எழுதியுள்ள அறிக்கை வடிவிலான 4பக்க கடிதத்தில்தான் இந்த தகவல்கள் உள்ளன.
சசிகலாவுக்காக சிறப்பு சமயலறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் பகீர் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை இல்லை
இதுபோல சிறப்பு கிச்சன் அமைப்பது சிறை விதிமுறைகளுக்கு மாறானது. இதற்காக சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சத்யநாராயணராவ் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ஒரு வதந்தி சிறைத்துறையில் உலவுகிறது.

மெமோ கொடுத்தார்
நான் பணிக்கு சேர்ந்தது முதலே சத்யநாராயணராவ் எனது பணியில் இடையூறு செய்து வந்தார். நான் ஏன் பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் ஜூலை 10ம்தேதி சென்றேன் என்று விளக்கம் கேட்டு எனக்கு மெமோ கொடுத்தார். எனக்கு சிறையில் நடக்கும் மோசடிகளை விசாரிக்க அதிகாரம் உள்ளது.

நடவடிக்கை
நெருக்கடிகள் அதிகமாக உள்ளதால், நீங்கள் உடனடியாக இதில் தலையிட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருந்தவில்லை
சசிகலா அளவுக்கு அதிகமான நபர்களை சிறையில் சந்திக்க விதிமுறைகளை வளைத்து அதிகாரிகள் சலுகை காட்டுவதாக முன்பு செய்தி வெளியானது. பிறகு அதில் கொஞ்சம் கெடுபிடி காட்டுவதை போல காட்டிக்கொண்டனர் போலீசார். ஆனால், உள்ளுக்குள் இவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது இப்போது அம்லமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications