ராமநாதபுரத்தில் ஜோடிக்கப்பட்ட வழக்கில் திருப்பம்.. நிரபராதிகளுக்கு இழப்பீட்டு தொகை குறைக்கப்பட்டது
ராமநாதபுரத்தில் ஜோடிக்கப்பட்ட வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தற்போது புதிய தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
டெல்லி: ராமநாதபுரத்தில் ஜோடிக்கப்பட்ட வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தற்போது புதிய தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதில் நிரபராதிகளுக்கு கொடுக்கப்பட்ட இழப்பீட்டு தொகை குறைக்கப்பட்டுள்ளது.
2012ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் தோப்புவலசை என்று கிராமத்தில் வீடு ஒன்று கொளுத்தப்பட்டது.
நிலப் பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் நடந்தது. இதில் 6 பேர் மரணம் அடைந்தார்கள். 5 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்கள்.

எதிர்த்தார்கள்
ஆனால் இந்த ஐந்து பேரும் இந்த குற்றச்சாட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்தார்கள். நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்கள். மேலும் எங்களுக்கும் மரணம் அடைந்தவர்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும் குறிப்பிட்டார்கள்.

வழக்கு ஜோடிப்பு
இந்தநிலையில் இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஐந்து பேரும் நிரபராதிகள் என்றும் கூறப்பட்டது. இவர்கள் மொத்தமாக 93 நாட்கள் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பணம்
மேலும் இவர்களுக்கு 2 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தமிழக போலீஸ் வழக்கை மோசமாக நடத்தி இருக்கிறது. இது மனித தன்மையற்ற செயல் என்று குறிப்பிட்டது.

குறைத்தார்கள்
இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றது. அதன்படி தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் தற்போது ஏற்றுக்கொண்டு இருக்கிறது. அதன்படி இழப்பீட்டு தொகை 2 லட்சத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
-
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல்












Click it and Unblock the Notifications