மணிப்பூர் போலி என்கவுண்ட்டர் விவகாரம்... சிபிஐ விசாரணை குழுவை விளாசிய சுப்ரீம் கோர்ட்
மணிப்பூர் போலி என்கவுண்ட்டர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை குழுவை விமர்சித்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: மணிப்பூர் போலி என்கவுண்ட்டர் விவகாரத்தில் பெரும்பாலான முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்யாத சிபிஐ-ன் சிறப்பு புலனாய்வு குழுவை உச்சநீதிமன்றம் கடுமையாக விளாசியது.
மணிப்பூரில் தனிநாடு கோரும் ஆயுத குழுவினர் என்ற சந்தேகத்தில் 1,500-க்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

மேலும் போலி என்கவுண்ட்டர் புகார்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவும் சிபிஐ-ன் விசாரணை குழுவுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த விசாரணைகளை டிசம்பர் 31-ந் தேதிக்குள் நிறைவு செய்யவும் அப்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி லோகுர், யுயு லலித் தலைமையிலான பெஞ்ச் முன்பாக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ விசாரணை குழுவின் அறிக்கை ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் இதுவரை 12 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சிபிஐ சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை போக்கை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள், பிப்ரவரி 28-ந் தேதிக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 12 வழக்குகளின் விசாரணையை முடிக்க கெடு விதித்தது.
மேலும் 30 முதல் தகவல் அறிக்கையை ஜனவரி 31-ந் தேதிக்குள் பதிவு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விசாரணையை சிபிஐ கண்காணிக்கவும் உத்தரவிட்டு மார்ச் 12-ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications