வீரப்பன் கூட்டாளிகள் நால்வர் உட்பட 15 பேரின் தூக்கு ரத்து- ஆயுள் தண்டனையாக குறைப்பு!!

கடந்த 1993-ஆம் ஆண்டு கர்நாடகாவில் வீரப்பனின் கூட்டாளிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் அம்மாநில காவல் துறையினர் 22 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் வீரப்பனின் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், பிலவேந்திரன், சைமன், மீசை மாதையன் ஆகிய 4 பேருக்கு மைசூர் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இதற்கு எதிராக அவர்கள் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில், ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக அதிகரித்து உச்ச நீதிமன்றம், கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது.
தங்களது தூக்கு தண்டனையை குறைக்க கோரி 4 பேரும் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பினர். அந்த மனுக்களை 9 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனாதிபதி நிராகரித்தார்.
இதனையடுத்து, கருணை மனுக்களை நிராகரிக்க நீண்ட காலம் எடுத்துக் கொண்டதால், தூக்கு தண்டனையை குறைக்க கோரும் உரிமை உள்ளது எனக் கூறி, அவர்கள் சார்பில் வழக்கறிஞர் காலின் கான்சல்ஸ் உச்ச நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மனுத் தாக்கல் செய்தார்.
இம் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச், நால்வரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.
மேலும் 4 பேரையும் தனி அறையில் அடைக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீரப்பன் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், பிலவேந்திரன், மீசை மாதையன் ஆகியோர் பெல்காம் மாவட்ட சிறையிலும், சைமன் பெங்களூரு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பல்வேறு வழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அவற்றை ரத்து செய்யக் கோரிய 11 பேரின் மனுவையும் ஏற்ற உச்சநீதிமன்றம், தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications