கடப்பா: கட்டிடம் இடிந்து விழுந்து 7பேர் பலி… 32 பேர் படுகாயம்
கடப்பா: சீமாந்திராவின் கடப்பா மாவட்டத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் பலியாகி உள்ளனர். 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சீமாந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் நவாப்பேட்டை கிராமத்தில் சஞ்சீவநாயுடு என்பவர் டிராக்டர் மோதி உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை மாலை நடந்து கொண்டிருந்தது,
அந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகளைப் பார்க்க அருகே இருந்த ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ஏராளமானோர் ஏறி நின்று கொண்டிருந்தனர். அப்போது, திடிரென அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.
இதில் 3 பெண்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதில் 7 வயது சிறுமியும் ஒருவர்.
மேலும் 32 பேர் படுகாயமடைந்தனர். இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. படுகாயமடைந்த அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.