உலகின் மாபெரும் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அறிவிப்பு.. பங்குச் சந்தையில் மருத்துவ பங்குகள் விர்ர்
Recommended Video

டெல்லி: மருத்துவ துறை மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த அறிவிப்புகளால் பங்குச் சந்தையில் அவற்றின் விலை ஏற்றம் கண்டது.
10 கோடி குடும்பங்களை கவர் செய்யும் அளவுக்கான உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டத்தை கொண்டுவரப்போவதாக பட்ஜெட்டில் அருண் ஜேட்லி அறிவித்தார். அவர் அறிவிப்பு வெளியிட்டதுமே, பங்குச் சந்தைகளில் மருத்துவமனை, பார்மசி சார்ந்த பங்குகள் நல்ல உயர்வை கண்டன.

அப்பல்லோ மருத்துவமனை பங்குகள் 4.1 சதவீத உயர்வையும், தைரோகேர் டெக்னாலஜிஸ் பங்குகள் 2.6% உயர்வையும், குளோபல் என்டர்பிரைசஸ் லிமிட்டர் பங்குகள் 3% உயர்வையும், கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிடல் பங்குகள் 1.3% அளவுக்கும் வளர்ச்சி கண்டன.
ஏற்கனவே விவசாய துறை சார்ந்த பங்குகளும் நல்ல ஏற்றத்தை கண்டிருந்த நிலையில், பார்மா துறை பங்குகளும் உயர்வடைந்துள்ளதால் பங்குச் சந்தையில் திருவிழா கொண்டாட்ட சூழல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications