சத்ருகன் சின்ஹாவின் அண்ணி தூக்கு போட்டு தற்கொலை
குர்காவ்ன்: பாஜக எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்ஹாவின் அண்ணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாஜக எம்.பி.யும், பாலிவுட் நடிகருமான சத்ருகன் சின்ஹாவின் அண்ணன் பரத் சின்ஹா. பரத் லண்டனில் வசித்து வருகிறார். பரத்தும், அவரது மனைவி ஷீலா சின்ஹாவும்(60) கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துவிட்டனர்.

ஷீலா குர்காவ்னில் வசித்து வந்தார். அவரது மகள் பாரதி அகமதாபாத்தில் வசிக்கிறார். ஷீலாவின் மகன் பெங்களூரில் வசிக்கிறார். ஷீலாவின் மகன் ஒரு தொழில் அதிபர். தனியாக வசித்து வந்த ஷீலா வேலைக்கு கூட ஆள் வைத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில் ஷீலாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது ஷீலா மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இருந்தது தெரிய வந்தது.
அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. ஷீலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications