இந்திராணியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை கோர்ட் உத்தரவு
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜி, அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் முன்னாள் டிரைவர் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். இதையடுத்து மும்பை போலீசார் அந்த 3 பேரையும் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். முதலில் கடந்த 5ம் தேதியுடன் அவர்களுடைய காவல் முடிந்தது.

இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலை இன்று வரை நீட்டித்தனர். இந்நிலையில் இன்றுடன் காவல் முடிந்ததையடுத்து போலீசார் இந்திராணியை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் இந்திராணியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. போலீசார் கன்னா மற்றும் ராயை கொலை விசாரணை தொடர்பாக கொல்கத்தா அழைத்துச் சென்றுள்ளதால் அவர்களை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவில்லை.
முன்னதாக போலீசார் நேற்று இந்திராணியை மும்பையில் இருக்கும் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இந்நிலையில் போலீசார் இந்திராணியின் தற்போதைய கணவர் பீட்டர் முகர்ஜியிடம் மூன்றாவது முறையாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த ஷீனாவை கொலை செய்துவிட்டு விசாரணையில் ஒத்துழைக்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications