சட்டசபையில் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்த சிவசேனா: பாஜகவுடன் பேச்சுவார்த்தைக்கும் தயார்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில் சிவசேனா எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது. ஆனால் அரசில் பங்குபெறுவது பற்றி பாஜக பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் பேச தயார் என்று தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபையில் மைனாரிட்டி பாஜ அரசு தனது பெரும்பான்மையை நாளைக்குள் நிரூபிக்க வேண்டும். இந்நிலையில் சிவசேனாவுடன் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாமல் உள்ளது. பாஜக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உதவியை ஏற்றால் நாங்கள் நிச்சயம் எதிர்கட்சி இருக்கையில் அமர்ந்து அரசுக்கு எதிராக வாக்களிப்போம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருந்தார்.

ஆனால் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸோ முதலில் நம்பிக்கை வாக்கெடுப்பு அதன் பிறகே பதவிகள் அளிக்கப்படும் என்று சிவசேனாவுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த பரபரப்பான சூழலில் புதிய அரசு பதவியேற்ற பிறகு மகாராஷ்டிரா சட்டசபை நேற்று முதல் முறையாக கூடியது. சட்டசபைக்கு வந்த சிவசேனா உறுப்பினர்கள் நேராக எதிர்கட்சி வரிசைக்கு சென்று அங்கு அமர்ந்தனர்.
இந்நிலையில் இது குறித்து உத்தவ் கூறுகையில்,
எதிர்கட்சி தலைவர் பதவியை அளிக்குமாறு சட்டசபை செயலாளருக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். எங்களுக்கு இந்த பதவி கிடைப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை. ஆனால் எங்கள் பொறுமையை பலவீனமாக நினைக்காதீர்கள். எங்கள் பலத்தை குறைத்து எடைபோட ஒருபோதும் விடமாட்டோம்.
பேச்சுவார்த்தை நடப்பதாக பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இருப்பினும் பாஜக எப்பொழுது முன்வருகிறதோ அப்பொழுது அதனுடன் அரசில் பங்கேற்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications