"மகாராஷ்டிராவின் எதிரிகள்." - பாஜக தலைவர்கள் மீது சிவசேனா பாய்ச்சல்!!

Subscribe to Oneindia Tamil

மும்பை: 25 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொண்ட பாஜகவின் தலைவர்களை "மகாராஷ்டிராவின் எதிரிகள்" என்று சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் எழுந்த சிக்கலால் பாரதிய ஜனதா -சிவசேனா கூட்டணி முறிந்து போனது. கால் நூற்றாண்டு கால கூட்டணி முறிந்து போனாலும் சிவசேனாவை எதிரியாக கருதமாட்டோம் என்று பாஜக கூறியிருந்தது.

Shiv Sena dubs BJP leaders "enemies of Maharashtra"

இதுபற்றி சிவசேனாவின் சாம்னா நாளேட்டில் எழுதப்பட்டுள்ளதாவது:

பாஜக-சிவசேனா கூட்டணி நீடிக்க வேண்டும் என்று 11 கோடி மகாராஷ்டிரா மக்கள் விரும்பினார்கள். ஆனால் கூட்டணியை உடைத்து மகாராஷ்டிரா மக்களின் உணர்வுகளுக்கு எதிரான எதிரிகளாக மாறிவிட்டார்கள்.

கூட்டணியை முறித்துக் கொண்டது என்பது சம்யுக்தா மகாராஷ்டிரா பேரியக்கத்தின் 105 மராத்திய மாவீரர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அவமானம். இந்துத்துவா கொள்கைக்காக மட்டுமே 25 ஆண்டுகாலம் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தோம். அது முறிந்து போனது துரதிர்ஷ்டவசமானது.

பாஜக மற்றும் இதர கட்சிகளுடனான கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதற்காக சிவசேனா கடைசிவரை முயற்சித்தது. கடவுள் துல்ஜா பவானியின் விருப்பங்களே அடுத்தடுத்து அரங்கேறும்.

அரசியல் கூட்டல் கழித்தல்களுக்கு அப்பால் மகாராஷ்டிராவின் எதிர்காலம்தான் முதன்மையானது. நேற்று வரை நம்முடைய முகாம்களில் வழிபாடு நடத்தியவர்கள் இன்று மற்றொரு முகாமுக்குப் போய் தொழுகை நடத்துகிறார்கள்.

மகாராஷ்டிராவைப் பற்றி காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் இந்த மண்ணை சிவசேனா காப்பாற்றும். நமது கூட்டணியை விட்டு விலகிச் சென்றவர்கள் விரைவில் அதன் விளைவுகளை உணருவார்கள்.

இவ்வாறு சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+