உ.பி.கோவிலில் வானில் இருந்து கொட்டிய ரூ.500 நோட்டுகள்: ஓடியோடி எடுத்த பக்தர்கள்
ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் உள்ள பாங்கி பீகாரி கோவிலில் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் மழையாக பெய்ததை பார்த்து மக்கள் ஆச்சரியப்பட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் விருந்தாவனில் உள்ளது பாங்கி பீகார் கோவில். அந்த கோவிலில் கடந்த வாரம் திடீர் என்று கோபுரத்தின் உச்சியில் இருந்து
புத்தம் புதிய 500 ரூபாய் நோட்டுகளாக பறந்து வந்து தரையில் விழுந்தது. இதை பார்த்த பக்தர்கள் அதிசயித்தனர்.

பின்னர் கோவில் வளாகத்தில் இருந்த பக்தர்கள் ஓடியோடி 500 ரூபாய் நோட்டுகளை எடுத்தனர். என்ன அதிசயம், பண மழை பெய்கிறதே என்று அனைவரும் வியந்தனர். பின்னர் தான் உண்மை தெரிய வந்தது.
மும்பை போரிவாலி பகுதியைச் சேர்ந்த ஹேம்வதி சொன்கார்(50) என்ற பெண் ஆக்ரா, மதுரா, விருந்தாவன் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா வந்துள்ளார். அவர் தனது
கைப்பையில் ரூ.1.5 லட்சம் ரொக்கம் வைத்திருந்திருக்கிறார். அந்த பையை கோவில் வளாகத்தில் இருந்த குரங்கு பறித்துச் சென்று மரத்தின் உச்சியில் அமர்ந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து பறக்கவிட்டுள்ளது.
மரக்கிளைகள் குரங்கை மறைத்துவிட்டதால் மக்கள் வானில் இருந்து பணம் கொட்டியதாக நினைத்துவிட்டனர். அந்த கோவிலில் நூற்றுக்கணக்கான குரங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications