நாட்டின் மிகப் பெரிய தொகுதியான மல்கஜ்கிரியில் 30-ந் தேதி வாக்குப் பதிவு
ஹைதராபாத்: நாட்டின் மிகப் பெரிய லோக்சபா தொகுதியான தெலுங்கானாவின் மல்கஜ்கிரியில் வரும் 30-ந் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளது.
தெலுங்கானாவில் இருக்கிறது மல்கஜ்கிரி. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 30 லட்சம் பேர். இதுதான் நாட்டின் மிகப் பெரிய தொகுதி.

இத்தொகுதி ஹைதராபாத், செகந்திரபாத், மேடக் மாவட்டங்களை உள்ளடக்கி உள்ளது. இத் தொகுதியின் தற்போதைய எம்.பியாக உள்ள மத்திய அமைச்சர் சத்யநாராயணா மீண்டும் மூன்றாவது முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் தினேஷ் ரெட்டி, ஆம் ஆத்மி கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் பி.வி.,நரசிம்மராவின் பேரன் சுதா கிரண், தெலுங்குதேசம் சார்பில் மல்லாரெட்டி, லோக்சத்தா சார்பில் ஜெய்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக உள்ளனர். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. மயினம்பள்ளி ஹனுமந்த ராவும் போட்டியிடுவதால் மொத்தம் 6 முனைப் போட்டி நிலவுகிறது.
தெலுங்கானாவில் இப்பகுதி இருப்பினும் 40% சீமாந்திராவுடனும் இருக்கிறது. இதனால் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை சீமாந்திரா மக்களின் பாதுகாப்பு மற்றும் வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து பிரசாரத்தில் வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளன.
இத்தொகுதியில் வரும் 30-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. 6 முனைப் போட்டி என்பதால் முடிவு யாருக்கு என்பதில் தீர்மானிக்க முடியாத அளவுக்கு இத்தொகுதி நிலவரம் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications