தோழியை அடித்து நொறுக்கிய கிரிக்கெட் வீர் அமித் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு
பெங்களூர்: கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா பெண் ஒருவரை தாக்கியதற்காக அவர் மீது பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்பாக இந்திய அணிக்கு கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரில் பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா பெங்களூர் ஹோட்டலில் பெண் ஒருவருடன் தங்கியுள்ளார்.

அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அமித் அந்த பெண்ணை தாக்கியுள்ளார். இதையடுத்து அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் அமித் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக 7 நாட்களுக்குள் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு போலீசார் அமித் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த மாதம் 25ம் தேதி அமித் அந்த பெண்ணை தாக்கியுள்ளார். கடந்த 27ம் தேதி அமித் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானவற்றை போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணியில் அமித் கடந்த 19ம் தேதி சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications