டெல்லியில் இலங்கை அமைச்சர் ஜி.எல். பெரீஸ்! சுஷ்மா ஸ்வராஜூடன் சந்திப்பு!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியா வருகை தந்துள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று சந்தித்து பேசினார்.
ஜி.எல். பெரீஸ் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். இன்று பகல் ஒரு மணியளவில் சுஷ்மா ஸ்வராஜை அவர் சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பின் போது ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தனர். மேலும் இலங்கைக்கு பிரதமர் மோடி வருகை தர வேண்டும் என்று பெரீஸ் அழைப்பு விடுத்தார்.
பிரதமர் மோடி பதவியேற்ற போது இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வருகை தந்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்தியா- இலங்கை இடையேயான 2வது உயர்நிலை சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications