அதென்ன ராக்ஸ்டார்.. மோடியை விமர்சித்து ட்வீட் போட்டு திட்டு வாங்கிய ஷோபா டே
மும்பை: பிரதமர் மோடியை ராக்ஸ்டார் என்று கூறுவதை நிறுத்துங்கள் என ட்வீட் செய்து மக்களிடம் வசை வாங்கியுள்ளார் எழுத்தாளர் ஷோபா டே.
பிரபல எழுத்தாளர் ஷோ பா டே பிரதமர் நரேந்திர மோடியின் அமீரக பயணம் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். துபாயில் உள்ள கிரிக்கெட் அரங்கில் மோடி பேசுகையில் அங்கிருந்த இந்தியர்கள் அவரை ராக்ஸ்டார் என்று அழைத்தனர்.
இந்நிலையில் இது குறித்து ஷோபா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
|
மோடி
இந்திய பிரதமரை ராக்ஸ்டார் என்று அழைப்பதை தயவு செய்து நிறுத்துகிறீர்களா!!! ஹலோ துபாய். அவர் பாலிவுட்காரர் அல்ல என்று ஷோபா ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதை பார்த்த பலரும் அவரை திட்டி ட்வீட் போட்டுள்ளனர்.
|
வெறுப்பு
@DeShobhaa ஏன் இவ்வளவு வெறுப்பு? பாலிவுட்காரர்கள் எல்லாம் ராக்ஸ்டார்கள் என்று உங்களுக்கு யார் கூறினார்கள்? என சந்தீப் ஷோபாவிடம் ட்விட்டர் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
பாட்டி
ஷோபா டே பாட்டி, மோடிஜியால் அரங்கம் நிறைந்தது. அவர் அந்த மக்களின் இதயங்களிலும் வசிக்கிறார். அவர் உண்மையான ராக்ஸ்டார். வயிற்றெரிச்சல்? ஈனோ என மோடி தர்மா தெரிவித்துள்ளார்.
|
ராக்ஸ்டார்
ராக்ஸ்டார் ராக்ஸ்டார் ராக்ஸ்டார் ராக்ஸ்டார் ராக்ஸ்டார் ராக்ஸ்டார் ராக்ஸ்டார் ராக்ஸ்டார் ராக்ஸ்டார் ராக்ஸ்டார் ராக்ஸ்டார் ராக்ஸ்டார் என்று தஜிந்தர் பால் பாகா ட்வீட் போட்டு ஷோபாவை கடுப்பேற்றியுள்ளார்.
|
அது எப்படி
@DeShobhaa ஷோபா டேவை மற்றும் தான் ராக்ஸ்டார் என்று அழைக்க வேண்டும். அது எப்படி நாட்டின் பிரதமர் அவரை விட பிரபலமாக முயற்சிக்கலாம் என்று கிண்டல் செய்துள்ளார் ஹரிஷ் நாயர்.