இந்தியாவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் எண்ணிக்கை எவ்வளவு? மத்திய அமைச்சர் தகவல்
டெல்லி: இந்தியாவில் மொத்தம் 8500 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் உள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மாவோயிஸ்டுகள் குறித்து மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியுள்ளதாவது: கிடைத்திருக்கும் தகவல்கள் அடிப்படையில் இடதுசாரி தீவிரவாதிகளின் எண்ணிக்கை 8500. அதே நேரம் இவர்களின் அனுதாபிகள் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகம். நக்சலைட்டுகளிடம் எல்எம்ஜி, ஏகே-47 உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் உள்ளன.
சமீபகாலமாக பாதுகாப்பு படையினரை இந்திய கம்யூனிஸ்டின் மாவோயிஸ்டுகள், திட்டமிட்டு கொலை செய்துவருகிறார்கள். ஆண்டுதோறும் தங்கள் அமைப்புக்கு கூடுதலாக இளைஞர்களை சேர்த்துக்கொண்டுள்ளனர்.
குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இவ்வாறு தனது பதிலில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.