Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடியை புகழ்ந்ததற்காக பல்கலை. துணை வேந்தர் பதவியை பறித்த கேரள அரசுக்கு சுப்ரீம்கோர்ட் குட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிய அரசு அதிகாரி மீது கேரள அரசு எடுத்த நடவடிக்கையை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கேரளாவில், முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது, 2013ல், கேரளாவிலுள்ள சிவகிரி மடத்துக்கு (ஸ்ரீ நாராயண குருவால் ஏற்படுத்தப்பட்டது) வருகை தந்தார்.

அப்போது, கேரள கால்நடை பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்த டாக்டர் அசோக், நாளிதழ் ஒன்றில், மோடியை பாராட்டி, கட்டுரை எழுதினார்.

Supreme Court stays action against Kerala IAS officer for praising Narendra Modi

அக்கட்டுரையில், குஜராத் கலவரத்தை மோடி உரிய முறையில் தடுத்ததாகவும், அதேநேரம், முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலையை தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சியில்தான் சீக்கியர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்காக, கேரள அரசு, அசோக் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுத்தது. மேலும், அசோக்கை பணியில் இருந்து, நீ்க்கியது. கருத்து சுதந்திரத்தை கேரள அரசு நசுக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனிடையே, அரசு நடவடிக்கையை எதிர்த்து அசோக் தொடர்ந்த வழக்கில், பணி நீக்க உத்தரவை கேரள ஹைகோர்ட் ரத்து செய்தது. ஆனால், துறை ரீதியான நடவடிக்கைக்கு தடை விதிக்கவில்லை. இதையடுத்து அசோக், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். கேரள அரசின் நடவடிக்கைக்கு சுப்ரீம்கோர்ட் தடை விதித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+