இந்திய நகரங்களை “ஸ்மார்ட் சிட்டி” ஆக்க சுஷ்மா சுவராஜ் சிங்கப்பூர் பயணம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் முக்கிய நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக்கும் முயற்சிக்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன், "சிங்கப்பூருக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சிங்கப்பூர் பிரதமர் லீ ஹெய்சனை சந்தித்து பேச உள்ளார். அதில் இந்தியாவுடனான சிங்கப்பூரின் 50 ஆண்டுகால நல்லுறவும் பேணப்பட உள்ளது.

Sushma Swaraj to travel to Singapore, smart city project on agenda

சந்திப்பி்ன போது பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறி்த்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கடந்த ஆண்டில் சுமார் 5.9 பில்லியன் டாலர் அளவிற்கு சிங்கப்பூர், இந்தியாவுடன் வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளது.

இச்சந்திப்பின் போது சிங்கப்பூரின் கட்டிட அமைப்புகளையும், வளர்ச்சிகளையும் இந்திய நகரங்களில் அறிமுகப்படுத்தும் திட்டம் பற்றியும் விவாதிக்க உள்ளனர்" என தெரிவித்தார்.

முன்னதாக பிரதமர் மோடி ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறித்து ஒரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என மேலும் அவர் தெரிவி்த்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+