கேரளாவில் மாவோயிஸ்டுகளுடன் சண்டை எதிரொலி: தமிழக எல்லைகளில் தீவிரக் கண்காணிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் மாவோயிஸ்டுகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து தமிழக எல்லைப் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் தமிழக, கேரள எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள், போலீசாருக்கு இடையே நேற்று முன்தினம் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் மாவோயிஸ்டுகள் புகுந்திருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.

மேலும், தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள கிராமங்களுக்கு சென்ற மாவோயிஸ்டுகள், அங்கு உணவுப் பொருட்கள் சிலவற்றை வாங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
எனவே, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக எல்லைப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. கே.சங்கர் தெரிவித்தார்.
சேலம் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஐ.ஜி.கே. சங்கர், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
‘கேரள மாநிலத்தில் தமிழக, கேரள எல்லையை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள், போலீஸார் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக செய்திகள் வந்துள்ளன.
இதனால், ஈரோடு மாவட்டம், தாளவாடி, நீலகிரி மாவட்டம், தேவாளம் உள்ளிட்ட தமிழக வனப் பகுதிகளில் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், அங்குள்ள அதிரடிப் படையினருடன் இணைந்து ஹோமிங் ஆபரேஷன் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதிகளில் இரவு முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாவோயிஸ்டுகள் தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்புகள் இல்லை. இருப்பினும், அங்குள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள், தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications