கேரளாவில் மாவோயிஸ்டுகளுடன் சண்டை எதிரொலி: தமிழக எல்லைகளில் தீவிரக் கண்காணிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் மாவோயிஸ்டுகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து தமிழக எல்லைப் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் தமிழக, கேரள எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள், போலீசாருக்கு இடையே நேற்று முன்தினம் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் மாவோயிஸ்டுகள் புகுந்திருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.

மேலும், தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள கிராமங்களுக்கு சென்ற மாவோயிஸ்டுகள், அங்கு உணவுப் பொருட்கள் சிலவற்றை வாங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
எனவே, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக எல்லைப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. கே.சங்கர் தெரிவித்தார்.
சேலம் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஐ.ஜி.கே. சங்கர், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
‘கேரள மாநிலத்தில் தமிழக, கேரள எல்லையை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள், போலீஸார் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக செய்திகள் வந்துள்ளன.
இதனால், ஈரோடு மாவட்டம், தாளவாடி, நீலகிரி மாவட்டம், தேவாளம் உள்ளிட்ட தமிழக வனப் பகுதிகளில் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், அங்குள்ள அதிரடிப் படையினருடன் இணைந்து ஹோமிங் ஆபரேஷன் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதிகளில் இரவு முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாவோயிஸ்டுகள் தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்புகள் இல்லை. இருப்பினும், அங்குள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள், தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications