கேரளாவில் மாவோயிஸ்டுகளுடன் சண்டை எதிரொலி: தமிழக எல்லைகளில் தீவிரக் கண்காணிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் மாவோயிஸ்டுகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து தமிழக எல்லைப் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் தமிழக, கேரள எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள், போலீசாருக்கு இடையே நேற்று முன்தினம் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் மாவோயிஸ்டுகள் புகுந்திருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.

மேலும், தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள கிராமங்களுக்கு சென்ற மாவோயிஸ்டுகள், அங்கு உணவுப் பொருட்கள் சிலவற்றை வாங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
எனவே, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக எல்லைப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. கே.சங்கர் தெரிவித்தார்.
சேலம் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஐ.ஜி.கே. சங்கர், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
‘கேரள மாநிலத்தில் தமிழக, கேரள எல்லையை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள், போலீஸார் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக செய்திகள் வந்துள்ளன.
இதனால், ஈரோடு மாவட்டம், தாளவாடி, நீலகிரி மாவட்டம், தேவாளம் உள்ளிட்ட தமிழக வனப் பகுதிகளில் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், அங்குள்ள அதிரடிப் படையினருடன் இணைந்து ஹோமிங் ஆபரேஷன் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதிகளில் இரவு முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாவோயிஸ்டுகள் தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்புகள் இல்லை. இருப்பினும், அங்குள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள், தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications