8ம் வகுப்பு மாணவனின் முடியை வெட்டிய உடற்கல்வி ஆசிரியை சஸ்பெண்ட்
திருவனந்தபுரம்: கேரளாவில் 8ம் வகுப்பு மாணவனின் முடியை வெட்டிய உடற்கல்வி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது நெடுமங்காடு. அந்த ஊரில் உள்ள பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவர் ஒருவர் தலைமுடியை நீளமாக வளர்த்துள்ளார். முடியை நீளமாக வளர்ப்பது பள்ளி விதிமுறைகளுக்கு எதிரானது அதனால் முடியை வெட்டிவிட்டு வா என்று உடற்கல்வி ஆசிரியை மாணவரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் மாணவர் முடியை வெட்டவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை உடற்கல்வி வகுப்பின்போது மாணவனின் முடியை வெட்டிவிட்டுவிட்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாணவரின் தந்தை நேற்று போலீசில் புகார் கொடுத்தார். இந்நிலையில் முடியை வெட்டிய ஆசிரியையை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
போலீசார் விரைவில் ஆசிரியையிடம் விசாரணை நடத்த உள்ளனர். இந்நிலையில் ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல இளைஞர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications