தானே மத்திய சிறை இனி அதிரும்ல... கைதிகளே நடத்தும் எஃப்எம் விரைவில் தொடக்கம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானே மத்திய சிறையில் கைதிகளே நடத்தும் வானொலி பன்பலை வரைவில் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தானே மத்திய சிறைகளில், கைதிகளே நடத்தும் எஃப்எம் அடுத்த 15 நாட்களில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. எஃஎம் தொடங்கிய பின்னர் சிறையில் உள்ள கைதிகளே ரேடியோ ஜாக்கியாக செயல்படுவார்கள் என்றும், எஃப்எம் நிகழ்சியானது சிறைகளுக்குள் மட்டுமல்லாமல் மற்ற நகரப்பகுதிகளிலும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் தொடக்க விழாவிற்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை அழைக்க திட்டமிட்டுள்ளனர்.

அம்மாநில அமைச்சர் எக்நாத் ஷிண்டே நேற்று தானே சிறைக்கு வருகை தந்தார். அப்போது 'பதஞ்சலி யோகா சமிதி' அமைப்பு சமீபத்தில் நடத்திய யோகா வகுப்பை நிறைவு செய்த 29 கைதிகளுக்கு, அவர் சான்றிதழ் வழங்கினார். மேலும் சிறை வளாகத்தில் உள்ள பழுது வேலைகளை சரி செய்யுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சிறை வளாகத்தில் உடற்பயிற்சி கூடம் ஒன்று தொடங்கப்படலாம் என்றும் ஆலாசனை வழங்கினார். இதனிடையே ஷிண்டேவிடம், சிறை கண்காணிப்பு அதிகாரியான ஹிராலா ஜாதவ் அடுத்த 15 நாட்களில் சிறையிலேயே எஃப்எம் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு அரசு தேவையான உதவியைச் செய்யும் என்று அமைச்சர் ஷிண்டேவும் தெரிவித்துள்ளாராம்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications