நிக்கோபார் தீவுகளில் அதிகாலையில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.8 ஆக பதிவு.. மக்கள் பீதி

அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

நிக்கோபார்: அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மக்கள் பீதி அடைந்து இருக்கிறார்கள்.

இன்று அதிகாலை 6.30 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தீவு முழுக்க இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் மக்கள் பீதிக்கு உள்ளானார்கள்.

 The Nicobar Islands hits with a 4.8 magnitude earthquake

இதனால் கட்டிடங்கள் ஏதேனும் இடிந்து விழவில்லை. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.8 ஆக பதிவாகி இருக்கிறது.

சுமார் 12 நிமிடங்கள் இந்த நிலநடுக்கம் நீடித்தது. இந்த நிலநடுக்கம் 45 கிமீ வரை உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுவரை இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனாலும் இதனால் பெரிய சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+