கர்நாடகா.. நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வை டிவியில் நேரலையாக ஒளிபரப்ப வேண்டும்: உச்சநீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கர்நாடக தற்காலிக சபாநாயகர் போப்பையாவே நீடிப்பார்- வீடியோ
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு டிவியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எடியூரப்பா அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்ச்சியின்போது தற்காலிக சபாநாயகராக போப்பையா செயல்பட கூடாது என காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சிக்ரி, சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்ய வேண்டும். நேரலை செய்தால் குழப்பம் வராது என நம்புகிறோம். மேலும் சட்டசபை செயலரும் அவை நடவடிக்கைகளை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications