பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ.. இந்த சம்பவத்தை பாருங்க
Recommended Video

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை விண்ணைத்தொட்டுள்ள நிலையில், டெல்லியில், சுரங்கம் அமைத்து இந்தியன் ஆயில் பைப்பை உடைத்து எரிபொருளை திருட முயன்றுள்ளனர் கொள்ளையர்கள்.
தென்மேற்கு டெல்லியின், கக்ரோலா பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பைப்லைனில் ஓட்டை போட்டு எரிபொருளை திருட சில கொள்ளையர்கள் முயன்றபோது, குண்டு வெடிப்பதை போன்ற சத்தத்தோடு அது வெடித்தது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து ஓடி வந்து பார்த்தனர்.
இதற்குள் கொள்ளையர்கள் தப்பியோடினர். அவர்கள் 150 அடி நீளத்திற்கு சுரங்கம் அமைத்து எண்ணை குழாயில், மெஷினை வைத்து ஓட்டை போட்டது அம்பலமானது. இதையடுத்து ஓட்டையை அடைக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணையில் சுபைர் என்ற கொள்ளையன் சிக்கியுள்ளான். ஏற்கனவே அவன் இந்த குழாயில் இருந்து எண்ணையை திருடியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இன்னும் என்னென்ன அதகளங்களை நாடு பார்க்கப்போகிறதோ தெரியவில்லை.












Click it and Unblock the Notifications