ஜெ.வுக்கு எதிராக வாதாடியே கோடீஸ்வரரான கர்நாடக அரசு வக்கீல் அதிரடி ஆச்சார்யா!
பெங்களூரு: எம்.ஜி.ஆரால் வாழ்ந்தவர்கள் பலர். ஜெயலலிதாவால் வீழ்ந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் அவரால் வாழ்ந்து கோடீஸ்வரர் ஆகியுள்ளார் ஒருவர். அவர்தான் கர்நாடக அரசு வக்கீல் பி.வி. ஆச்சார்யா!
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரான அவருக்கு சம்பளமாக மட்டும் ரூ. 1.06 கோடி அளவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம். ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கில் வாதாடி வந்தவர் பி.வி.ஆச்சார்யா. ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சிறைத் தண்டனை கிடைக்க முக்கியக் காரணமே இவரது வாதம்தான்.
ஜெயலலிதா - சசிகலா தரப்பு ஜவ்விழு இழுத்து வாய்தா மேல் வாய்தா போட்டு அலைக்கழித்தபோதும் அசராமல் நின்று விளையாடியவர் ஆச்சார்யா. இவரது வாதத் திறமையின் காரணமாக கீழ் கோர்ட்டில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் தலையெழுத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

ஆர்டிஐ மூலம்
கர்நாடகத்தைச் சேர்ந்த ஆர்டிஐ சேவகர் டி. நரசிம்மமூர்த்தி என்பவர் சொத்துக் குவிப்பு வழக்கில் யாருக்கு எவ்வளவு சம்பளம் தரப்பட்டது என்பது குறித்து ஆர்டிஐ மூலமாக கர்நாடக அட்வகேட் ஜெனரல் அலுவலகத்தில் கேட்டிருந்தார்.

ரூ. 1,06,86,018
இதற்கு அட்வகேட் ஜெனரல் அலுவலகம் அளித்துள்ள பதிலில் கர்நாடக அரசு வழக்கறிஞராக வாதாடிய பி.வி. ஆச்சார்யாவுக்கு சம்பளமாக 1 கோடியே 6 லட்சத்து 86 ஆயிரத்து 18 ரூபாய் தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தின் மொத்த செலவு
இந்த வழக்கில் கர்நாடக அரசு செய்த செலவாக 2 கோடியே 78 லட்சத்து 70 ஆயிரத்து 888 ரூபாய் என்றும் அட்வகேட் ஜெனரல் அலுவலகம் தனது பதிலில் தெரிவித்துள்ளது.

தமிழக அரசிடமிருந்து வசூல்
இந்தத் தொகை அனைத்தையும் தமிழக அரசிடமிருந்து கர்நாடக அரசு வசூலிக்கவுள்ளது. காரணம், இந்த வழக்கை தமிழகத்திலிருந்து பெங்களூருக்கு உச்சநீதிமன்றம் மாற்றியபோது, ஆகும் செலவு அனைத்தையும் தமிழக அரசே தர வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications