தெலுங்கானாவில் மீண்டும் "பழைய அம்பாசடர்" ஆட்சிதான்... எக்சிட் போல் முடிவுகள்
Recommended Video

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் இரண்டாவது முறையாக சந்திரசேகர் ராவின் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 இடங்களுக்கான தேர்தல் இன்று நடந்து முடிந்தது. 1821 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஊடகங்கள் இன்று மாலையில் இருந்து வெளியிட்டு வருகின்றன.

இந்தியா டிவி கணிப்பு
இந்தியா டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 79 முதல் 91 இடங்கள் வரை பெறும் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கூட்டணி 21 முதல் 33 இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாக இந்தியா டிவி கணித்துள்ளது. பாஜக 1 முதல் 3 இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், ஏஐஎம்ஐஎம் 4 முதல் 7 இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் இந்தியா டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கணிப்பில் தெரியவந்துள்ளது,

டைம்ஸ் நவ்-சிஎன்எக்ஸ் கணிப்பு
டைம்ஸ் நவ்-சிஎன்எக்ஸ் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 66 இடங்களை வெல்லும் என்றும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 37 இடங்களை வெல்லும் என்றும் கணித்துள்ளது. பாஜக கூட்டணி 7 இடங்களில் வெல்லக்கூடும் என டைம்ஸ் நவ்வின் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் டிவி மற்றும் ஜன்கி பாத்
ரிபப்ளிக் டிவி மற்றும் ஜன்கி பாத் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 50 முதல் 65 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 38 முதல் 52 இடங்களையும், பாஜக 4 முதல் 7 இடங்கள் வரையும் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 8 முதல் 14 இடங்கள் வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ் கணிப்பு
நியூஸ் எக்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 57 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 46 இடங்களையும், பாஜக 6 இடங்களையும் மற்றவர்கள் 10 இடங்களையும் வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications