போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் பீகார் மாநிலம் பங்கேற்காது! பூகம்ப மீட்பு உதவிக்காக..!
Subscribe to Oneindia Tamil
பாட்னா: நேபாளத்திலும், பீகார் மாநிலத்திலும், பூகம்பத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தங்கள் மாநில போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்க மாட்டார்கள் என்று பீகார் மாநில போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் உதய் சின்ஹா அறிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து நாளை நாடு தழுவிய அளவில் பந்த் நடைபெறுகிறது.
இதனிடையே பீகார் மாநில போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் உதய் சின்ஹா வெளியிட்ட அறிக்கையில், "நேபாளம் மற்றும் பீகாரில் பூகம்பத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளுக்கு வாகனங்கள் தேவைப்படுகிறது. எனவே, பீகார் மாநிலத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யமாட்டர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications