உ.பியில் ரயில்கள் மோதி விபத்து: 2 பேர் பலி 11 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
சோன்பத்ரா: உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா ரயில் நிலையத்தில் பாசஞ்சர் ரயிலும், சோபன் இன்டர் சிட்டி ரயிலும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ரயில் விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மேலும், விபத்து பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications