உ.பி.யில் மீண்டும் கொடூரம்.. சிதைத்த நிலையில் சிறுமி உடல் மீட்பு.. பலாத்காரம் செய்து கொலை?
லகன் உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் 20 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதால் நாடே பரபரப்பால் பற்றி எரிந்து வரும் நிலையில், மீண்டும் அங்கு ஒரு சிறுமியை கொடூரமாக கொன்று வயலில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கள் மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் மீது பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் கான்பூர் தேஹத் மாவட்டத்தில் செப்டம்பர் 26 அன்று கிராமத்தில் காணாமல் போன சிறுமியின் சடலம் காட்டில் பல்வேறு பாகங்களாக சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது, இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனைக்காக உடல் பாகங்களை காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்த சிறுமி பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

உயிரிழந்த சிறுமியின் தந்தைக்கும் அருகில் உள்ள நிலத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கும் இடையே நில தகராறு இருந்துள்ளது. இதனால் அவரது மைனர் மகளை கொலை கொலை செய்திருக்கிறார்கள் அந்த இரண்டு பேர். அவகர்ளை கைது செய்து விசாரித்து வருகிறோம்" என்று கான்பூர் தேஹாத் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
இதனிடையே உத்தரப்பிரதேச அரசுக்கு எதிராக போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரம் அடைந்து வருகிறது. ஹத்ராஸ் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரையும் தூக்கிலிட வேண்டும் என்று டெல்லியில் நடந்த போராட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தினார்.
பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை ஆளும் பாஜக அரசால் தடுக்க முடியவில்லை என்று எதிரக்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. - ஹத்ராஸ் வழக்கிற்க பின் அதேபோன்ற மேலும் இரண்டு சம்பவங்கள நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications