For Quick Alerts
For Daily Alerts
Just In
தேர்தலில் மண்னைக் கவ்வியதால் அதிரடி! உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் கூண்டோடு கலைப்பு!!
டெல்லி: லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து கமிட்டிகளும் கூண்டோடு கலைக்கப்பட்டுவிட்டது.
லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பாஜக 71 தொகுதிகளைக் கைப்பற்றியது. சமாஜ்வாடி கட்சி 5 தொகுதிகளில் வென்றது.
காங்கிரஸ் கட்சியோ 2 இடங்களில் மட்டுமே வென்றது. ஒருகாலத்தில் காங்கிரஸை மத்தியில் அரியணை ஏற்றிய உத்தரப்பிரதேசத்தில் இம்முறை மண்ணைக் கவ்வியது காங்கிரஸ்.
இதனைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் அத்தனை கமிட்டிகளும் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநில காங்கிரஸ் தலைவராக நிர்மல் நீடிப்பார் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
Comments
English summary
Congress dissolves Uttar Pradesh Congress Committee. However, PCC Chief Nirmal Khatri stays.