உத்தரகாண்ட்: பாஜகவிற்கு 36 முதல் 46 இடங்கள், காங்கிரசுக்கு 20 முதல் 30 இடங்கள்- இந்தியா டுடே சர்வே
டேராடூன்: உத்தரகாண்டில் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது இந்தியா டுடே.
நடந்துமுடிந்த உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலில் பாஜக அதிக இடத்தைப் பிடிக்கும் என்றும், ஆனாலும் அதற்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் கட்சி பிடிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர் என ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் இன்றோடு முடிவடைந்துள்ளன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்தியா டுடே
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை இந்தியா டுடே நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 36-46 இடங்களும், காங்கிரஸ் கட்சி 20-30 இடங்களைப் பிடிக்கும் என்றும், பிஎஸ்பி 2-4 இடங்களும், மற்றவை 2-5 இடங்களைப் பிடிக்கும் என்றும் இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட்
உத்தரகாண்டில் 13 மாவட்டங்களில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 632 வாக்காளர்கள் போட்டியிடுகிறார்கள். 81 லட்சம் வாக்காளர்கள் தகுதியானவர்களாக அறியப்படுகிறார்கள். இந்த 70 தொகுதிக்கும் ஒரே கட்டமாக கடந்த 14ம் தேதி தேர்தல் நடந்தது.

பாஜக
உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த 5 ஆண்டுகளில் 3 முதல்வர்களை மாற்றியுள்ளது பாஜக. திராத் சிங் ராவத், திரிவேந்திர சிங் ராவத் ஆகியோருக்கு பின்னர் 3 ஆவது முதல்வராக புஷ்கர் சிங் தமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முறை பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளர் தமி முதல்வர் வேட்பாளராக களமிறங்குகிறார். பாஜக கடந்த தேர்தலில் 70 இடங்களில் 57 இடங்களைப் பெற்றது.

மீண்டும் வெற்றி
இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 36-46 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து பெரும்பான்மையோடு பாஜக ஆட்சிக்கு வரும் என்றும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications