வாரணாசியில் பாஜக அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை!
Subscribe to Oneindia Tamil
வாரணாசி: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் பாஜக அலுவலகத்தில் திடீரென போலீசார் இன்று சோதனை நடத்தினர்.
கடைசி கட்ட லோக்சபா தேர்தல் நாளை 41 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் ஒன்று. இத்தொகுதியில் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரிவால் போட்டியிடுகிறார்.

இத்தொகுதியில் பிரசாரம் முடிவடைந்து வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாளை வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் திடீரென பாஜக அலுவலகத்தில் இன்று போலீசார் சோதனை நடத்தினர்.

ஏற்கெனவே பாஜகவுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் மோதல் நீடித்து வரும் நிலையில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications