15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோவை வாட்ஸ்அப்பில் அனுப்பிய பக்கத்து வீட்டு வாலிபர்கள் கைது!
ஆக்ரா: 15 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் மிரட்டி பலாத்காரம் செய்த மூன்று இளைஞர்கள் அதை யூடியூப், வாட்ஸ்அப்பில் பரவ விட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவின் எட்மாடவுல்லா என்ற பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த மாதம் 15ம்தேதி, அவரது வீட்டுக்குள் மூன்று இளைஞர்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போதுதான் தகவல் தெரிந்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுவதாவது: 15 வயது சிறுமியின் பெற்றோரும், சகோதரனும் வெளியே போயிருந்த நேரத்தில் அந்த சிறுமி தனியாக இறுப்பதை தெரிந்து கொண்டு, நரேஷ், ஜெய்வீர், ராஜேஷ் ஆகிய மூன்று வாலிபர்களும் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
துப்பாக்கியை காண்பித்து மிரட்டி பலாத்காரம் செய்த இளைஞர்கள், அதை வீடியோவாக எடுத்துள்ளனர். கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால் சிறுமியும் அதுகுறித்து வெளியே சொல்லவில்லை.
இந்நிலையில் யூடியூப், வாட்ஸ்அப் போன்றவற்றில் பலாத்கார வீடியோ பரவவிடப்பட்டுள்ளது. இதையடுத்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடந்ததை தந்தையிடம் கூறியுள்ளார் அந்த சிறுமி. தந்தை அளித்த புகாரின்பேரில் பலாத்காரம், மற்றும் போஸ்கோ சட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்துள்ளோம் என்றனர்.
குற்றவாளிகள் மூவருமே, சிறுமியின் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications