டோணியை குறை சொல்வதா?: ட்விட்டரில் யுவராஜின் தந்தையை திட்டும் மக்கள்
சென்னை: கேப்டன் டோணி மீது யுவராஜ் சிங்கின் தந்தை குற்றம் சாட்டியுள்ளது பற்றி தான் பலர் ட்விட்டரில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தனது மகன் இடம்பெறாததற்கு கேப்டன் டோணி தான் காரணம் என கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் குற்றம்சாட்டியுள்ளார். டோணி தனிப்பட்ட பிரச்சனையை மனதில் வைத்து யுவராஜ் சிங்கை அணியில் சேர்க்கவிடாமல் செய்துவிட்டார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்கள் ட்விட்டரில் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று பார்ப்போம்.
|
தந்தைகள்
அனைத்து தந்தைகளும் தனது மகனின் பிரபலமான நண்பர் மீது குற்றம் சாட்டுகின்றனர். முன்பு ஸ்ரீசாந்தின் தந்தையும் டோணி மீது தான் குற்றம் சாட்டினார் என கேட் ஃபிஷ் என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
குழந்தை போன்று
சின்னபுள்ளதனமாக நடந்து கொள்வதை நிறுத்துங்கள்... மகன் பக்குவமாக நடக்கிறார்...அணியை தேர்வு செய்ய நினைத்தால் தேர்வாளர் ஆகுங்கள்...#YograjSingh என ராகுல் கோஷல் தெரிவித்துள்ளார்.
|
ஓவர்
யோக்ராஜ் சிங் ஓவராக நடந்து கொள்கிறார். ஆனால் யுவராஜோ சிறப்பான வீரர். அவரின் தந்தை இப்படி செய்திருக்கக் கூடாது. கவனத்தை ஈர்க்க விரும்புகிறார் என பிரயாக் தெரிவித்துள்ளார்.
|
டோணி
டோணியின் தலைமை திறன் பாதிக்கப்பட்டால் அதற்கு யோக்ராஜ் சிங்கின் குற்றச்சாட்டு தான் காரணம்...எங்களுக்கு உலகக் கோப்பை வேண்டும்...நாங்கள் டோணியை ஆதரிக்கிறோம் என்று யஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
|
யோக்ராஜ்
இந்தியா பாகிஸ்தானை எப்படி வீழ்த்தியது என்று யோக்ராஜ் சிங் கவலைப்படுகிறாரோ?. சர், நம்மிடம் திறமையாளர்கள் உள்ளனர்(திறமையாளர்கள் என்றால் அது யுவராஜ் மட்டும் அல்ல) என ஒருவர் கோஹ்லியின் பெயரில் ட்வீட் செய்துள்ளார்.