போலி சான்றிதழ் விவகாரத்தில் கைதான அமைச்சர் ஜிதேந்தர்சிங் தோமர்- டெல்லி அரசுக்கு சிக்கல்!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: போலி கல்வி சான்றிதழ் சமர்ப்பித்ததாக டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்தர்சிங் தோமர் கைது செய்யப்பட்டுள்ளது டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் உள்துறை, சட்ட அமைச்சர் பொறுப்பு வகித்து வருபவர் ஜிதேந்திரசிங் தோமர். இவர் போலி கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தற்போது ஜிதேந்திரசிங் தோமர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் டெல்லி அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே ஜிதேந்திரசிங் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆளும் ஆத்மி அரசு குற்றம்சாட்டியுள்ளது.
சர்ச்சையை கிளப்பியிருக்கும் ஜிதேந்திரசிங் தோமர் பற்றிய சில தகவல்கள்..
- டெல்லியின் திரிநகர் தொகுதியின் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட தோமரின் வயது 49.
- உத்தரப்பிரதேசத்தில் 1966ஆம் ஆண்டு பிறந்தவர் தோமர்; டெல்லி மற்றும் உ.பி.யில் பள்ளி படிப்பு முடித்தவர்.
- 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்தார். அப்போது திரிநகர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
- 2015ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்த நந்த் கிஷோரை 22,311 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் தோமர்.
- டெல்லியில் 17 ஆண்டுகாலமாக வசித்து வருகிறார் தோமர்.
- தோமரின் சொத்து மதிப்பு ரூ 1,07,24,369.
- பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த தோமர், 1999ஆம் ஆண்டு பீகார் பாகல்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்ததாக சான்றிதழை சமர்ப்பித்திருந்தார்.
- இந்த சான்றிதழ் போலியானது என வழக்கு தொடரப்பட்டது. அப்போது பீகார் பல்கலைக் கழகமும் தோமர் சட்டப் படிப்பு படித்ததற்கான சான்றிதழை வழங்கவில்லை எனக் கூறியிருந்தது.
- இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றமும் தோமருக்கு விளக்க நோட்டீசை அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் இன்று தோமர் கைது செய்யப்பட்டுள்ளார்.
More From
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications