ஜாகிர் நாயக் மீது மத்திய அரசு வழக்குப்பதிவு செய்ய தயங்குவது ஏன்? - திக்விஜய் சிங்
டெல்லி: இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் நமது சட்டத்தை மீறி ஏதேனும் பேசியிருந்தால், மத்திய அரசும், மகராஷ்டிரா அரசும் அவர்மீது வழக்குப்பதிவு செய்யாமல் பதுங்குவது ஏன்? என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஓட்டலில் கடந்த 1-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, ஜாகிர் நாயக்கின் பேச்சுகளை ஆய்வு செய்யுமாறு வங்காளதேசம் இந்தியாவை கேட்டுக்கொண்டது. அதன்பேரில் தொடர்ந்து இந்தியா விசாரித்து வருகிறது. இதற்கிடையே ஜாகீர் நாயக் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.
இதற்கிடையே, 2012-ம் ஆண்டு ஜாகிர் நாயக் ஏற்பாடு செய்த ஒருநிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கலந்து கொண்டதும், மேடையில் இருவரும் ஒன்றாக தோன்றிய விவகாரமும் பெரும் சர்ச்சையாகியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய திக்விஜய் சிங் ஜாகிர் நாயக்கை அமைதிக்கான தூதர் என்று புகழாரம் சூட்டியிருந்தார்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திக்விஜய் சிங், "ஜாகிர் நாயக் இந்தியாவில் அமைதிக்கான கருத்துக்களை பரப்பினார்," என்று மீண்டும் கூறியுள்ளார். ஜாகிர் நாயக் நமது சட்டத்தை மீறி ஏதேனும் பேசியிருந்தால், மத்திய அரசும், மராட்டிய அரசும் அவர்மீது வழக்குப்பதிவு செய்யாமல் பதுங்குவது ஏன்? என்று திக்விஜய் சிங் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications