முலாயம்சிங் கருத்துக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கனும்... அது அவரோர உரிமை: தேவகவுடா
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பையன்கள்..தவறு செய்வார்கள்.. அதற்காக பலாத்காரத்துக்கு எல்லாம் தூக்கு தண்டனை விதிப்பதா? என்ற முலாயம்சிங் யாதவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்க முடியாது என்று மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா கூறியுள்ளார்.

முலாயம்சிங் யாதவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் கருத்து கேட்கப்பட்டது.
அப்போது, முலாயம்சிங் தமது கருத்தை தெரிவிக்க உரிமை இருக்கிறது. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கிறது.
எதற்காக நான் முலாயம்சிங் யாதவை கண்டிக்க வேண்டும்? இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் ஜனாதிபதியும்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications