படான் சம்பவம்: எஸ்.சி/எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாதது ஏன்? உள்துறை அமைச்சகம் கேள்வி
டெல்லி: படான் பலாத்கார சம்பவத்தை எஸ்.சி/எஸ்.டி. பிரிவினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யாதது ஏன்? என்று உத்தரபிரதேச அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், படான் மாவட்டத்தில் உள்ள கத்ரா கிராமத்தில் கடந்தவாரம் தலித் சிறுமிகள் 2 பேர் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் இருவரையும் கொன்று ஒரு மாமரத்தில் தொங்கவிட்டனர். சிறுமிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்தரை செய்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சமாஜ்வாடி அரசு உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தது.
சிறுமிகள் காணாமல் போனது குறித்து புகார் பெற்றோர்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத போலீசார் இரண்டு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் பலாத்காரம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.
மேலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் உள்துறை அமைச்சகத்திடம், உ.பி. மாநில சமாஜ்வாடி அரசு விளக்கம் அளித்தது.
இந்நிலையில் படான் சம்பவத்தில் எஸ்.சி/எஸ்.டி. பிரிவினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம், உத்தரபிரதேச மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications