படான் சம்பவம்: எஸ்.சி/எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாதது ஏன்? உள்துறை அமைச்சகம் கேள்வி
டெல்லி: படான் பலாத்கார சம்பவத்தை எஸ்.சி/எஸ்.டி. பிரிவினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யாதது ஏன்? என்று உத்தரபிரதேச அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், படான் மாவட்டத்தில் உள்ள கத்ரா கிராமத்தில் கடந்தவாரம் தலித் சிறுமிகள் 2 பேர் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் இருவரையும் கொன்று ஒரு மாமரத்தில் தொங்கவிட்டனர். சிறுமிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்தரை செய்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சமாஜ்வாடி அரசு உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தது.
சிறுமிகள் காணாமல் போனது குறித்து புகார் பெற்றோர்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத போலீசார் இரண்டு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் பலாத்காரம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.
மேலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் உள்துறை அமைச்சகத்திடம், உ.பி. மாநில சமாஜ்வாடி அரசு விளக்கம் அளித்தது.
இந்நிலையில் படான் சம்பவத்தில் எஸ்.சி/எஸ்.டி. பிரிவினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம், உத்தரபிரதேச மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.












Click it and Unblock the Notifications