"மீண்டும் முதல்வரான பிறகே அவைக்குள் கால் வைப்பேன்!" சபதம் போட்டு சொல்லியடித்த சந்திரபாபு நாயுடு
விசாகப்பட்டினம்: ஆந்திர சட்டசபைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு தான் எடுத்த சபதத்தை நிறைவேற்றி இருக்கிறார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுடன் ஆந்திர மாநிலத்திற்குச் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கும் நிலையில், ஆந்திர சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஆந்திர தேர்தல் முடிவுகள்: தொடக்கம் முதலே ஆந்திராவில் பல்வேறு தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலையில் இருந்த நிலையில், அங்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைத் தெலுங்கு தேசம் பதிவு செய்துள்ளது. ஆந்திராவில் மொத்தம் 175 தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் 132 தொகுதிகளில் தெலுங்கு தேசம் முன்னிலை பெற்றுள்ளது.
அவரது கூட்டணியில் இருந்த பவன் கல்யாண் கட்சி 21 தொகுதிகளைக் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், பாஜக 8 சீட்களில் முன்னிலையில் இருக்கிறது.. ஆளும் கட்சியாக இருந்த ஒஎய்எஸ்ஆர் காங்கிரஸ் வெறும் 14 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது.
சந்திரபாபு நாயுடு: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் முதல்வரான பிறகே ஆந்திர சட்டசபையில் நுழைவேன் என்று தான் எடுத்த சபதத்தை நிறைவு செய்து இருக்கிறார் சந்திரபாபு நாயுடு. அதென்ன சபதம்.. எதற்காக அவர் இப்படியொரு சபத்தை எடுத்தார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தச் சம்பவம் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. அப்போது ஆந்திர சட்டசபையில் இருந்து வெளியேறிய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தன்னை பற்றி ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாகக் குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு கண்ணீர்விட்டு அழுதார்.
கண்ணீர்விட்ட சந்திரபாபு நாயுடு: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, "கடந்த இரண்டரை வருடங்களாகத் தொடர்ந்து என்னை அவமானப்படுத்தினார்கள்.. நான் அமைதியாக இருந்தேன். ஆனால், இன்று எனது மனைவி குறித்தும் அவதூறாகப் பேசுகிறார்கள்.. என் மனைவிக்கும் அரசியலுக்கும் தொடர்பே இல்லை.. நான் எப்போதும் மான மரியாதையுடன் வாழ்ந்து வந்துள்ளேன். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது" என்று கூறி கண்ணீர் விட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசினார்கள். அதற்கு நான் பதில் அளிக்க முற்பட்ட போது, அதற்குக் கூட அனுமதிக்காமல் மைக்கை ஆஃப் செய்துவிட்டனர். பதில் சொல்லக் கூட எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே நான் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தேன். ஆனால், இப்போது நான் சொல்கிறேன். மீண்டும் ஆட்சியைப் பிடித்த உடன் முதல்வர் பதவியை ஏற்ற பிறகே இந்த அவைக்குத் திரும்புவேன். அதுவரை ஆந்திர சட்டசபைக்குள் கால் வைக்க மாட்டேன்" என்று கூறியிருந்தார்.
சபதத்தை நிறைவேற்றினார்: அதன் பிறகு மூன்று ஆண்டுகள் சட்டசபை நடந்த போதிலும் அவர் ஆந்திர சட்டசபைக்குச் செல்லவே இல்லை. இதற்கிடையே இப்போது ஆந்திர தேர்தலில் அவரது கட்சி மிகப் பெரியளவில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பதவியேற்பது உறுதியாகியுள்ளது. வரும் ஜூன் 9ஆம் தேதி அவர் முதல்வராகப் பதவியேற்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சந்திரபாபு நாயுடு தனது சபதத்தை நிறைவேற்றி உள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications