For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தானேவில் பெண் பஸ் கண்டக்டரின் ஆடையை கிழித்தெறிந்து தாக்கிய பயணி

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் பயணி ஒருவர் பெண் கண்டக்டரின் ஆடைகளை கிழித்தெறிந்து அவரை அடித்த சம்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவ்லி பகுதியில் அபிஷேக் சிங்(30) என்பவர் மகாராஷ்டிரா அரசு போக்குவரத்து கழக பேருந்தில் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு ஏறியுள்ளார். அவர் பேருந்தின் முன்பக்கமாக ஏறியுள்ளார். இதற்கு டிரைவரோ ஏன் தவறான வழியில் ஏறுகிறீர்கள், பின் வழியாக ஏற வேண்டியது தானே என்று கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அபேஷேக் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்த 34 வயது பெண் கண்டக்டர் அபிஷேக்கிடம் வயதானவருடன் ஏன் வாக்குவாதம் செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். உடனே அபிஷேக் கண்டக்டரை பேருந்தில் இருந்து வெளியே இழுத்து வந்தார்.

அபிஷேக் கண்டக்டரின் ஆடையை கிழித்தெறிந்து அவரை அடித்து நொறுக்கினார். பேருந்து நிறுத்தத்தில் நடந்த இந்த சம்பவத்தை பயணிகள் அனைவரும் வேடிக்கை பார்த்தனர். அதன் பிறகு சில மாணவர்கள் வந்து அபிஷேக்கை தடுத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அபிஷேக்கை கைது செய்தனர்.

English summary
In a shocking incident of a woman being harassed yet again, a woman bus conductor was dragged out of the bus by a youth, before being stripped and beaten. This happened on the outskirts of Mumbai this morning in a bus that ployed between Kalyan and Panvel at around 8:30 am.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X