மைக்கேல் மதனகாமராஜன் பாட்டி ஸ்டைலில் நகை திருடிய பெண்: காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 2 பெண்கள் ஒரு டப்பா நிறைய இருந்த தங்க மோதிரங்களை திருடியது சிசிடிவி கேமராவில் பதிவானது.
மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய நகரமான அசன்சோலில் உள்ள நகைக் கடைக்கு 2 பெண்கள் சென்றனர். கடைக்காரர் நகைகளை பிற வாடிக்கையாளர்களுக்கு எடுத்துக் காண்பித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த 2 பெண்களில் ஒருவர் நகைகளை பார்ப்பது போல நடித்தார். அந்த வேளையில் அவருடன் வந்த மற்றொரு பெண் யாருக்கும் தெரியாமல் தங்க மோதிரங்கள் நிறைந்த டப்பாவை நைசாக எடுத்து புடவைக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்.
ஒரு டப்பா நிறைய மோதிரங்கள் காணாமல் போனதில் கடைக்காரர் அதிர்ச்சி அடைந்தார். உடனே கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானவற்றை பார்த்தபோது தான் 2 பெண்களின் கபடநாடகம் தெரிய வந்தது.
இந்த சம்பம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.