யோகாவும், சூர்ய நமஸ்காரமும் இஸ்லாமுக்கு எதிரானது – போர்க்கொடி தூக்கும் முஸ்லிம் சட்ட வாரியம்
டெல்லி: இந்தியாவில் அனைத்துப் பள்ளிகளிலும் யோகா மற்றும் சூரிய வணக்கம் கட்டாயமாக்கப்படுவது இஸ்லாமுக்கு எதிரானது என்று முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடவும் வாரியம் முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படவுள்ளதை பாஜக அரசு தனது வெற்றியாக கருதுகிறது.
இந்நிலையில், யோகாவுக்கு எதிராக களமிறங்க முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் மெளலானா காலித் ரஷீத் கூறுகையில், "யோகா விவகாரம் தொடர்பாக எங்களது வாரியத்தில் மெளலானா வாலி ரஹ்மானி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்கள் தங்களுக்கு உரிய அரசியல் உரிமைகளை அறிந்து கொள்ள வைப்பதற்கான வழிமுறைகளை அந்தக் குழு ஆராயும். பள்ளிகளில் கற்பிக்கப்படவுள்ள யோகா மற்றும் சூரிய வணக்கம் ஆகியவை முஸ்லிம் மத நம்பிக்கைகளுக்கு எதிரானவை என்பதை மக்களிடையே எடுத்துக் கூறுவோம்.
அண்மைக் காலமாக ஷரியா சட்டங்களுக்கு எதிரான முடிவுகளை சில நீதிமன்றங்கள் எடுத்துள்ளன. அதுபோன்ற தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்" என்று தெரிவித்துள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications